பொதுபல சேனாவுடன் கைகோர்த்துள்ள இன்னும் சில கடும்போக்கு அமைப்புகள் எதிர்வரும் தினங்களில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னதாக மன்னார் நீதிமன்றுக்கு கல்லெரிந்தாக குற்றம் சுமத்தபடும் சம்பவம் மற்றும் வில்பத்து முஸ்லிம் குடியேற்ற விவகாரத்தையும் முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கடும்போக்கு அமைப்புகளில் இருந்து கசிந்துள்ள செய்திகள் மூலம் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.
ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்ப்பில் அவ்வமைப்புகள் நடத்திய கலந்துரையாடல்களில் இந்த விடயம் முக்கிய பங்கை வகித்துள்ளது.
ஹிருனிகா வாலிபர் கடத்தல் சர்ச்சை மற்றும் இன்னொரன்ன பெரும்பானமை பிரபலங்கள் தொடர்பான சர்ச்சைகளை விளம்பரம் செய்வதை விட ரிஷாத் பதியுதீன் தொடர்பான சர்ச்சைகளை முன்னிறுத்தி போரட்டத்தை முன்னெடுப்பதின் ஊடாக சகோதர இனத்தை ஆதிரமூட்டி ஞான சார தேரரை விடுதலை செய்துகொள்ள வியூகம் வகுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஏற்கனவே அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக கடும்போக்கு இணையதளங்கள் மற்றும் முகநூல்கள் தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment